சமகாலத்தில் திராவிட இயக்கங்கள் கொள்கை ரீதியாக அரசியல் பண்பாடு ரீதியாக மதவாத சக்திகளிடம் பெரும் எதிர்ப்பையும், அமைப்பு ரீதியாக தன்னுள்ளே தளர்வையும் சந்தித்து வருகிறது. இதற்கு அதன் அடிப்படை சித்தாந்தம் வலுவில்லாமல் சிதைந்து வருவதே காரணம். திராவிட இயக்கங்கள் தமிழ்நாட்டிற்கு செய்த பணிகளைப் பற்றி பேசுகிற நூல்,தெற்கிலிருந்து ஒரு சூரியன். பெரியார், அண்ணாதுரை,கலைஞர் கருணாநிதி என மூவரும் தம் பேச்சு, எழுத்து,அரசியல் செயல்பாடு வழியாக சமூக நீதியை அடிப்படையாக்கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை எப்படி உருவாக்கினர் என நூல் விளக்குகிறது. வளர்ச்சிபெற்ற மாநிலமாக தமிழ்நாடு மாற,ஒன்றிய அரசிடம் போராடிப் பெற்ற உரிமைகளைப் பற்றி நூல் விளக்கமாக எடுத்துரைக்கிறது.
தெற்கிலிருந்து ஒரு சூரியன், இந்து தமிழ்திசை நாளிதழ் ஆசிரியர் குழு,இந்து தமிழ்திசை பதிப்பகம்
credits
www.canva.com
www.freepik.com
www.fossify.org
www.audacityteam.org
pixabay.com
buy book.. https://shorturl.at/8ztny









